திரைப்படம்: செங்கமலத் தீவு (1962)
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜமுனா ராணி
இயற்றியவர்: திருச்சி தியாகராஜன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்:
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
பெண்:
மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?
மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?
ஆண்: கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா?
காதலும் சதியால் பிரிந்து வாடுமா?
கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா?
காதலும் சதியால் பிரிந்து வாடுமா?
இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா?
எவருக்கும் என் மனம் இடம் தருமா?
இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா?
எவருக்கும் என் மனம் இடம் தருமா?
ஆண்:மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
பெண்:மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?
பெண்: பருவத்தில் சிரிப்பைக் குறைத்திருந்தேன்
சிரித்திடும் உரிமைக்குக் காத்திருந்தேன்
பருவத்தில் சிரிப்பைக் குறைத்திருந்தேன்
சிரித்திடும் உரிமைக்குக் காத்திருந்தேன்
இருவரின் கனவும் பலித்திடுமா?
பெருமையை சிறுமை ஜெயித்திடுமா?
இருவரின் கனவும் பலித்திடுமா?
பெருமையை சிறுமை ஜெயித்திடுமா?
ஆண்: மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
பெண்: மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?
ஆண்: மரத்துக்குப் பூங்கொடி மாலையிடும்
பொருத்தமாய்த் திருமண நாளும் வரும்
பெண்: கரையான் நெருப்பை அரித்திடுமா நம்
கருத்தை வஞ்சகம் அழித்திடுமா?
ஆண்:மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
பெண்:மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?