Wednesday 12 December 2012

எம் கே டி பாகவதர் பாடியது

ஆடும் அருவி
ராகம் -சாருகேசி
தாளம் - ஆதி




எடுப்பு

ஆடிவரும் அருவியிலே அமுத இசை கேட்குதம்மா!
அள்ளிப் பருகிடவே உள்ளம் துடிக்குதம்மா!

தொடுப்பு

பாடும் குயிலினமும் பச்சைப் பசுங்கிளியும்
பாய்ந்தோடும் மானினமும் நீர்வேட்கை கொள்ளுதம்மா-ஆடி

முடிப்பு

கொடிமுல்லை மாந்தளிரும்
குலுங்கும் சுவைக் கனியும்
குளித்துக் குளித்து அதில்
கொள்ளையின்பம் காணுதம்மா

பொடியாம் மகரந்தம்
பூவண்டு தூவிடவும்
பொன்னிறக் கதிரோனும்
புனலாடி நீந்துகிறான்
   (திருச்சி தியாகராஜன்)

No comments:

Post a Comment