1952 ஆம் ஆண்டு கவிஞர் திருச்சி தியாகராஜனுக்கு டிசம்பர் மாதம் க்றிஸ்துமஸ் நாளன்று பெண்குழந்தை பிறக்கிறது.வான்மதி என்று பெயர் சூட்டுகிறார்.மகள் வான்மதிக்காக கீழ்கண்ட தாலாட்டுப்பாடலையும் எழுதுகிறார்.பின்னர் அவரது நூலிலும் இப்பாடல் இடம் பெற்றது.
தாலாட்டுப் பாடல்
எடுப்பு
வஞ்சகமில்லா மானிடப் பிஞ்சே
வான்மதியே இன்பத் தேன்துளியே
தொடுப்பு
மஞ்சம் உனக்கு என் நெஞ்சமடீ
மான்விழி மூடியே நீ உறங்காய்
அமைதி
ஆசையென்னும் கடலில் அள்ளிய வெண்முத்தே
அரும்பு மல்லிகையே! செங்கரும்பின் தீஞ்சுவையே!
பாசமென்னும் வலையால் என்னைப் பற்றி இழுத்துவிட்டாய்
பாவலர் கற்பனையின் ஓவியமே உறங்காய் நீ!
No comments:
Post a Comment