ராகம் பைரவி
தாளம் ஆதி
எடுப்பு
ஆடை பளபளக்க மேடை மினுமினுக்க-ஆடி
தொடுப்பு
பஞ்சவர்ணக் கிளிகள் பார்த்துப் பார்த்து ரசிக்க
-ஆடி
அமைதி
குத்துவிளக்கு மொட்டு பக்குவமாய் மறைத்து
கவிவாணர் கலைவாணர் கருத்தையெல்லாம் இழுத்து
கதிரவன் முகம் பார்த்து புதுவண்ண நிறம் காட்டி- ஆடி
மணி இழைத்த பதக்கம் மார்பினிலே துலங்க
மதுவண்டின் ரீங்காரம் விதவிதமாய் முழங்க
தணியாத காதலினால் முகம் மலர்ந்து விளங்க
தாமரைப் பெண்ணழகி ஒரு காலால் இடை குலுங்க- ஆடி
No comments:
Post a Comment